வேங்கைவயல்: மானுடப் பேரவலம்
வேங்கைவயல்
என்றோர் அதிசய கிராமம்
அங்கு ஓர் அதிகாலை வேளை..
எப்போதும் போலே
விடியக் காத்திருக்கும் வானம்
மஞ்சளாய் மாறிப் போனது..
இதென்ன ஏதும் அதிசயமா?
சூரியபகவானின் கோபமா?
உள்ளூர் தெய்வக் குத்தமா?
அட, வானத்திற்குத் தான் காமாலையா?
இல்லை.. ஒன்றுமே இல்லை..
இது சூத்திர கபடதாரி ஒருவன்
புனைந்துகொண்ட சரித்திர வேடம்..
வேறொருவன்
கால் கழுவிக் கலக்கிச் சென்ற நீரில்
தனது பிட்டத்தைக் கூட
நனைக்க விரும்பாத அவன்தான்
அந்த மானுடப் பேரவலத்தை
நிகழ்த்திக் காட்டிய கொடுங்கோலன்..
தன்னுடையதோ
பிறனுடையதோ
பீயைத் தொட்டுச் சுமந்த
அந்தக் கைகளுக்கு ஒருபோதும் கூசவில்லை..
தன்னுடையதோ
பிறனுடையதோ
குடிக்கின்ற நீரில் பீயைக் கரைத்த
அந்த மனம் ஒருபோதும் வெட்கவில்லை..
நிற்க.!
'பீ'யா? இப்படிக் கூறலாமா?
இடக்கரடக்கிப் பேசுவதுதானே
இலக்கியத்திற்கு அழகு
இலக்கியவாதிக்கும் அழகு..
ஆம், எங்களைத் தவிர்த்த உங்கள் பார்வையில்
யாதொன்றும் அழகுதான்..
பீ,
மலம்,
நரகல் எதுவாயினும்
அதற்கு ஒரே மணம் தானே.!
அடக்க விரும்பியே
பழக்கப்பட்ட உங்கள் மூளைக்கு
இடக்கரடக்குதல் வசதி போல..
இடக்கரடக்குதல் வசதி போல..
பேரவலங்கள் கூட
உங்கள் காதுகளை எட்ட
கவித்துவமாய் வரவேண்டுகிறீர்கள்..
அன்றுதான் அறிந்து கொண்டேன்
‘பீ’யில் பட்டுத் தெறித்த
உங்கள் சமூகநீதிச் சிந்தனைகளை..
அன்றுதான் அறிந்து கொண்டேன்
சாதிக் கொழுப்பேறிப் பழுத்த
உங்கள் சனாதன வன்மங்களை..
அவன்
வீசி எறிந்த
அந்தப் ‘பீ’யின் மணம்
உங்கள் மூக்குகள்
அறியாததா என்ன?
அறிந்திருப்பீர்கள் தானே.!
இல்லையென்றால்
இதைக் கேட்கும்போதே
உங்கள் நாசியிலெல்லாம்
‘பீ’யின் மணம்
தழுவக் கூடட்டும்..
மாட்டிற்கும் நாட்டிற்கும்
ஆயிரமாயிரம் போர்புரிந்த
கனவான்களே,
ஒரு நிமிடம்
ஒரேயொரு நிமிடம்
இந்த மனிதர்களைத் திரும்பிப் பாருங்கள்..
ஆயிரமாயிரம்
வேங்கைவயல்களால் நிரம்பியதே
உங்கள் பாரத நாடு..
இப்போது அறிந்தீர்களா
வானின் நிற மாற்றம்
அந்த நீர்த்தொட்டியின்
பிரதிபலிப்பென்று..
ஒருவேளை
அந்த நீர் ஆவியாகலாம்..
ஆவியான நீர்
மேகத்தில் தஞ்சம் புகலாம்..
தஞ்சம் புகுந்த நீர்
நாளை உங்கள் வீட்டிலும்
மழையாய்ப் பொழியலாம்..
மழையாய்ப் பொழியும் நீரில்
உங்கள் குழந்தைகள்
துள்ளிக்குதித்து விளையாடலாம்..
ஏன்
உங்கள் மனைவியோ கணவனோ
சமைக்கவும் கூடலாம்..
இன்னும் தெளிவாய்ச்
சொல்ல வேண்டுமானால்
குறித்துக் கொள்ளுங்கள்..
என்றேனும் ஒருநாள்
உங்களுக்கோ
உங்கள் சந்ததியினருக்கோ
வேங்கைவயலின் இறையம்சம்
பொருந்திய நீர் வழங்கப்படலாம்..
அன்று ‘மடக்குமடக்கு’வெனக்
குடித்துவிட்டு உரக்கக் கூறுங்கள்..
இது என் சாதிக்காரனின்
சுத்தமான மலம் கலந்த நீரென்று.
- அலாதிப் பிரியன்
உங்கள் காதுகளை எட்ட
கவித்துவமாய் வரவேண்டுகிறீர்கள்..
அன்றுதான் அறிந்து கொண்டேன்
‘பீ’யில் பட்டுத் தெறித்த
உங்கள் சமூகநீதிச் சிந்தனைகளை..
அன்றுதான் அறிந்து கொண்டேன்
சாதிக் கொழுப்பேறிப் பழுத்த
உங்கள் சனாதன வன்மங்களை..
அவன்
வீசி எறிந்த
அந்தப் ‘பீ’யின் மணம்
உங்கள் மூக்குகள்
அறியாததா என்ன?
அறிந்திருப்பீர்கள் தானே.!
இல்லையென்றால்
இதைக் கேட்கும்போதே
உங்கள் நாசியிலெல்லாம்
‘பீ’யின் மணம்
தழுவக் கூடட்டும்..
மாட்டிற்கும் நாட்டிற்கும்
ஆயிரமாயிரம் போர்புரிந்த
கனவான்களே,
ஒரு நிமிடம்
ஒரேயொரு நிமிடம்
இந்த மனிதர்களைத் திரும்பிப் பாருங்கள்..
ஆயிரமாயிரம்
வேங்கைவயல்களால் நிரம்பியதே
உங்கள் பாரத நாடு..
இப்போது அறிந்தீர்களா
வானின் நிற மாற்றம்
அந்த நீர்த்தொட்டியின்
பிரதிபலிப்பென்று..
ஒருவேளை
அந்த நீர் ஆவியாகலாம்..
ஆவியான நீர்
மேகத்தில் தஞ்சம் புகலாம்..
தஞ்சம் புகுந்த நீர்
நாளை உங்கள் வீட்டிலும்
மழையாய்ப் பொழியலாம்..
மழையாய்ப் பொழியும் நீரில்
உங்கள் குழந்தைகள்
துள்ளிக்குதித்து விளையாடலாம்..
ஏன்
உங்கள் மனைவியோ கணவனோ
சமைக்கவும் கூடலாம்..
இன்னும் தெளிவாய்ச்
சொல்ல வேண்டுமானால்
குறித்துக் கொள்ளுங்கள்..
என்றேனும் ஒருநாள்
உங்களுக்கோ
உங்கள் சந்ததியினருக்கோ
வேங்கைவயலின் இறையம்சம்
பொருந்திய நீர் வழங்கப்படலாம்..
அன்று ‘மடக்குமடக்கு’வெனக்
குடித்துவிட்டு உரக்கக் கூறுங்கள்..
இது என் சாதிக்காரனின்
சுத்தமான மலம் கலந்த நீரென்று.
- அலாதிப் பிரியன்
Comments
Post a Comment