யட்சி


ஊடல் பொழுதில்
மன்றாடி மன்னித்தல்
படலத்திற்குப் பின்பாக,
கொஞ்சம் கடித்துக் கொள்ளவா
எனக் கேட்டால்
'கொஞ்சிக் கொண்டே கடி'
என்பவளிடம்
தோற்றுப்போகவே சபிக்கப்படட்டும்
இந்த ஆயுள் காலம்..

- அலாதிப் பிரியன்

Comments

Popular Posts